கோவையில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் - தமாகா இளைஞரணி தலைவர்

கோவை: கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி பெண்ணின் மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.

கோவை: கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி பெண்ணின் மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே மூப்பனார் பிறந்த நாளான இன்று கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவன் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.



இதன் பின்னர் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய பின்னர் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் இந்தியாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேவையற்ற விதத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை விட்டு வருவதாகவும் நோயை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சூழலில், என்ன காரணம் என்றே தெரியாமல் அதற்கு திமுகவினர் நீட் சாயம் பூசி வருவதாகவும் ஏற்கனவே அனிதா மரணத்தின் போது பல போராட்டங்களை நடத்திய திமுகவினர் நீட் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தை மேலும் நான்கு மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...