கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

புதிய கல்வி கொள்கையில் கட்டாயம் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைக்கண்டு மாநில அரசு இரு மொழிக்கொள்கைதான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் என தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்நிலையில், கோவை மாநகராட்சி தமிழக அரசிற்கு விரோதமாக மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வண்மையான கண்டனத்திற்குரியது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 14வது கேள்வியாக இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே இந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தன்னிச்சையாக இந்த கேள்வியை வடிவமைத்ததா அல்லது மாநில கல்வித்துறை இந்த விண்ணப்பத்தை முன்மொழிந்துள்ளதா என்கிற ஐயம் எழுகிறது. 

மாநில அரசு அறிவிப்பு மக்களின் எதிர்ப்பை கண்டு ஒருபுறம் இரு மொழிக்கொள்கை என அறிவிப்பு வெளியிட்டு விட்டு மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்தியை திணிக்க தொடங்கி விட்டதா என்கிற ஐயம் எழுகிறது. 

மேலும், கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய பாஜக அரசின் குலக்கல்வி முறையை புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்கிற கேள்வி எழுவதாகவும் உடனடியாக தமிழக அரசும் கோவை மாநகராட்சியும் இதனை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்வினையாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...