பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்க்கவும், திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு.

பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்க்கவும், திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு.

கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தவும், திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த ஆகஸ்ட் 13, 14 மற்றும் 17ம்தேதிகளில், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், பிகாம் தொழில்முறை கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து, ஐந்து பாடப்பிரிவுகள் என ஆண்டுக்கு 600 மாணவர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஏழை எளிய கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரி அல்லது உடுமலை மற்றும் கோவையிலுள்ள அரசு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், தாங்கள் படிக்க விரும்பும் பாட பிரிவுகள் கல்லூரியில் இல்லாததால்,மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.



ஆகவே, நடப்பாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து, கூடுதல் பாடப்பிரிவுகளை கொண்டுவர வேண்டும், என்று, திமுக முரசொலி மன்ற தலைவர் மணிமாறன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, உள்ளிட்ட திமுகவினர் சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம், மனு அளித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...