கோவையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை.


கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கபட்டு இருந்த நகை மற்றும் ₹40,000 ரூபாய் பணம் திருட்டுப்போன சம்பவம், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை செட்டிபாளையம்- பல்லடம் சாலையில் உள்ள விக்னேஷ் பார்க் என்ற குடியிருப்பு பகுதியில் ரவிக்குமார்- ஜெகதீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில், நான்கு சக்கர வாகனம் அலைன்மெண்ட் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி, மயிலேரிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில், இன்று இருவரும் பணிக்கு சென்று விட்ட நிலையில், மாலை ஜெகதீஸ்வரி வீடு திரும்பிய போது, பூட்டிய வீட்டின் கதவு உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கபட்டு இருந்த எட்டு பவுன் நகை மற்றும் ₹40,000 ரூபாய் திருடபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அங்கு வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...