கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக தன்னலமின்றி பாடுபட்டு வரும் அரசு களப் பணியாளர்களுக்கு சுதந்திர தினம் அன்று தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக தன்னலமின்றி பாடுபட்டு வரும் அரசு களப் பணியாளர்களுக்கு சுதந்திர தினம் அன்று தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற, சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர் என்ற விருதை பொள்ளாச்சி வட்டாட்சியர், தனிகவேலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.
அதேபோல், பொள்ளாச்சி நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சத்யராஜ், முருகேசன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விருது பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி வாழ் மக்கள் அவர்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற, சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர் என்ற விருதை பொள்ளாச்சி வட்டாட்சியர், தனிகவேலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.
அதேபோல், பொள்ளாச்சி நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சத்யராஜ், முருகேசன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விருது பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி வாழ் மக்கள் அவர்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.