கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக, நாட்டின் 74 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக, நாட்டின் 74 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில், அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர்.
கொரோனா நோய் பாதிப்பு உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
மேலும், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில், அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர்.
கொரோனா நோய் பாதிப்பு உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
மேலும், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.