கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கோவை: கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் இலவச யோகா வகுப்புகளை நடத்தி வரும் ஈஷா யோகா மையமானது, கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறை கைதிகளின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் முறையில் அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை
ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28-ம் தேதி முதல்
நடத்தப்பட்டு வருகிறது.
ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
இந்த யோக பயிற்சிகள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியையும், நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கும், உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும், என தெரிவித்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக
இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்௧கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுவதாக ஈஷா சார்பில் தெரிவித்தனர்.
தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை
ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28-ம் தேதி முதல்
நடத்தப்பட்டு வருகிறது.
ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
இந்த யோக பயிற்சிகள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியையும், நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கும், உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும், என தெரிவித்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக
இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்௧கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுவதாக ஈஷா சார்பில் தெரிவித்தனர்.