காரமடை அருகே உதவித்தொகை பெற்று திரும்பிய பழங்குடியின முதியவர் காட்டுயானை தாக்கி படுகாயம்

காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட,கடமான் கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த முதியவர், உதவித்தொகை பெற்று திரும்பிய போது காட்டுயானை தாக்கி படுகாயமடைந்தார்.


கோவை: காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட, கடமான் கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த முதியவர், உதவித்தொகை பெற்று திரும்பிய போது காட்டுயானை தாக்கி படுகாயமடைந்தார்.

காரமடை அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குக்குட்பட்ட கடமான்கோம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ரங்கரேசன் (70). இவர், நேற்று கடமான் கோம்பையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு முதியோர் உதவித்தொகை வாங்க அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்துள்ளார்.

அப்போது, உதவித்தொகை பெற்ற பின்னர் மீண்டும் கடமான்கோம்பை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, புதரில் மறைந்து இருந்த காட்டுயானை ஒன்று திடீரென ரங்கரேசனை தாக்கியது. அப்போது, இவரின் சப்தம் கேட்டு அந்த வழியாக வந்த மற்றவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர்.

பின்,காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரை

பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் இடுப்பு, தோல், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், அவரை மேல் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...