பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணை; மீன்களை அழிக்க, சார் ஆட்சியர் உத்தரவு

கோவை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணை இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அந்த பணியில் உள்ள மீன்களை அழிக்க, சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணை இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அந்த பணியில் உள்ள மீன்களை அழிக்க, சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் என்ற கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், பண்ணை குட்டை அமைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், தனியார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.



இந்நிலையில், அங்கு வளர்க்கப்பட்டு வரும் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அழிப்பதற்கு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும், தோட்டத்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் வருவாய்த்துறையினர், சம்பந்தபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக மற்ற மீன்களை கொன்று தின்னும் குணம் படைத்தது. இதனால், உள்நாட்டு மீன் வகைகள் அழியும் அபாயம் உள்ளது. மேலும், இந்த மீன்களால் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே, இவ்வகை மீன்கள் தமிழகத்தில் வளர்ப்பதற்கும், விற்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...