திருப்பூரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி; காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது, காவல்நிலைய வளாகத்தில் பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

பாதிக்கபட்ட பெண் காவலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது இதனிடையே, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், காவல் நிலைய வளாகத்திலேயே மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர், அவரின் கணவர், மற்றும் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இன்று ஒரே நாளில் திருப்பூரில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 1197 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...