கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து காவலர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றப்பட்டது.

இதன் பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும், ஜூலை 7ம் தேதி அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இங்கு குற்றப் பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கடந்த வாரம் சளி காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போத்தனூர் காவல் நிலை குற்ற பிரிவில் முதலில் ஒரு பெண் காவலர், இரண்டாவதாக ஒரு ஆண் காவலர், மூன்றாவது நபராக சிறப்பு உதவி ஆய்வாளர் என மூவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...