கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து காவலர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றப்பட்டது.
இதன் பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும், ஜூலை 7ம் தேதி அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இங்கு குற்றப் பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கடந்த வாரம் சளி காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போத்தனூர் காவல் நிலை குற்ற பிரிவில் முதலில் ஒரு பெண் காவலர், இரண்டாவதாக ஒரு ஆண் காவலர், மூன்றாவது நபராக சிறப்பு உதவி ஆய்வாளர் என மூவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து காவலர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றப்பட்டது.
இதன் பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும், ஜூலை 7ம் தேதி அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இங்கு குற்றப் பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கடந்த வாரம் சளி காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போத்தனூர் காவல் நிலை குற்ற பிரிவில் முதலில் ஒரு பெண் காவலர், இரண்டாவதாக ஒரு ஆண் காவலர், மூன்றாவது நபராக சிறப்பு உதவி ஆய்வாளர் என மூவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.