வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!

கோவை: கோவையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

கோவை: கோவையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி, கோவையில் தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கம் பவுன், ரூ.39,824க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...