கோவை மாநகராட்சியில் 37 பகுதிகளில் 380 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 380 தெருக்கள் அடங்கும்.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 380 தெருக்கள் அடங்கும்.  

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை 3459 பாதிக்கப்பட்ட நிலையில், 1491 வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் இருந்து உள்ளூர் வாசிகளுக்கு கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் 37 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 380 தெருக்களில் 912 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் காய்ச்சல் முகாம்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன," என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...