கோவையில் பா.ஜ.க உறுப்பினர் கைது செய்யப்படாததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க அமைப்பினர்!

கோவை: பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை த.பெ.தி.க அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை த.பெ.தி.க அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் இந்து மதத்தையும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு பரப்பியதாக இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், “ஹேர் லைன்ஸ் நந்தா” என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நந்தா என்ற பா.ஜ.க உறுப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்டார்.

இதையடுத்து, பா.ஜ.க உறுப்பினர் நந்தாவை, சண்முகநாதன் மீது போடப்பட்ட அதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அதே 3 பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க உறுப்பினர் நந்தா இதுவரை கைது செய்யப்படாததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக த.பெ.தி.க அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதனால், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, காவல் துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் அனிதா பேராட்டகாரார்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர் சுதந்திரமாக நடமாடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...