கோவையில் மலைவாழ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குத்தகைதாரரை தட்டிக்கேட்ட தோட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து - குத்தகைதாரர் கைது!

கோவை: கோவையில் மலைவாழ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குத்தகைதாரரை தட்டிக்கேட்ட சம்பவத்தில் தோட்ட உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த குத்தகைதாரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் மலைவாழ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குத்தகைதாரரை தட்டிக்கேட்ட சம்பவத்தில் தோட்ட உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த குத்தகைதாரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 



கோவை நரசீபுரம் அருகே ராமசாமி (37) என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வெங்காயம் பயிரிட்டு வந்துள்ளார். இந்நிலையில், ராமசாமி அருகிலுள்ள பட்டியார்பதி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுமார் 24 வயது மதிப்புடைய திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அந்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் ராமசாமியை சரமாரியாக தாக்கி எச்சரிக்கை செய்து அனுப்பினர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அவர் பணியாற்றி வரும் தோட்ட உரிமையாளர் கார்த்திகேயனிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் ராமசாமியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராமசாமி கோபத்தில் கார்த்திகேயனை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். 

பின்னர் இது குறித்து தகவலறிந்த வந்த ஆலாந்துறை போலீசார், சம்பவம் தொடர்பாக ராமசாமி மீது கார்த்திகேயனை கத்தியால் குத்தியதற்கு ஒரு வழக்கும், மலைவாழ் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதற்கு பாலியல் வன்கொடுமை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனி வழக்கும் என இரு வழக்காக பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...