கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாழைத் தோட்டம் ஆற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, டோபி காலனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்தது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாழைத் தோட்டம் ஆற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, டோபி காலனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்தது.

தகவலறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாழைத்தோட்டம் ஆறு, அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்டேன்மோர் ஆற்றுப்பகுதியையயும், புதிதாக அமையவுள்ள போட் ஹவுஸ் பகுதியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வால்பாறை நகராட்சி ஆணையர் வட்டாட்சியர் அரசு போக்குவரத்து கழக துணை மண்டல மேலாளர் ஆகியோருடன் வெள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.
வால்பாறையில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அரசு போக்குவரத்து கழக மண்டல உதவி மேலாளர், ஜோதி மணிகண்டன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாழைத்தோட்டம் ஆறு, அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்டேன்மோர் ஆற்றுப்பகுதியையயும், புதிதாக அமையவுள்ள போட் ஹவுஸ் பகுதியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வால்பாறை நகராட்சி ஆணையர் வட்டாட்சியர் அரசு போக்குவரத்து கழக துணை மண்டல மேலாளர் ஆகியோருடன் வெள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.
வால்பாறையில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, அரசு போக்குவரத்து கழக மண்டல உதவி மேலாளர், ஜோதி மணிகண்டன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.