திருப்பூர்: திருப்பூரில் இன்று 8 வயதான ஆண் குழந்தை உட்பட புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 433 ஐ எட்டியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் இன்று 8 வயதான ஆண் குழந்தை உட்பட புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 433 ஐ எட்டியுள்ளது.
மேலும் 9 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்று திருப்பூர் குட்டப்பாளையத்தில் 32 வயதான பெண், வெங்காடு அலமேலு நகரில் 23 வயதான பெண், பல்லடம் மத்தனபுரியில் 32 வயதுடைய ஆண், வெங்காடில் 29 வயதான ஆண், சாமுண்டிபுரம் ராஜூவ் நகரில் 6 பேர், திருப்பூர் லட்சுமி நகரில் 70 வயதான பெண், தங்கம் நகரில் 64 வயதுடைய பெண், திருப்பூர் நொச்சிபாளையத்தில் 26 வயதான ஆண், வீரபாண்டியில் இரண்டு நபர், தாராபுரம் சுந்தரஅக்ராபுரத்தில் 53 வயதான ஆண், திருப்பூர் ஐஸ்வர்யா நகரில் 8 வயதான ஆண் குழந்தை உட்பட இருவர் உட்பட மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் திருப்பூரில் இன்று புதிதாக 123 உட்பட 2850 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 161 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதோடு, இன்று மட்டும் 712 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 9 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்று திருப்பூர் குட்டப்பாளையத்தில் 32 வயதான பெண், வெங்காடு அலமேலு நகரில் 23 வயதான பெண், பல்லடம் மத்தனபுரியில் 32 வயதுடைய ஆண், வெங்காடில் 29 வயதான ஆண், சாமுண்டிபுரம் ராஜூவ் நகரில் 6 பேர், திருப்பூர் லட்சுமி நகரில் 70 வயதான பெண், தங்கம் நகரில் 64 வயதுடைய பெண், திருப்பூர் நொச்சிபாளையத்தில் 26 வயதான ஆண், வீரபாண்டியில் இரண்டு நபர், தாராபுரம் சுந்தரஅக்ராபுரத்தில் 53 வயதான ஆண், திருப்பூர் ஐஸ்வர்யா நகரில் 8 வயதான ஆண் குழந்தை உட்பட இருவர் உட்பட மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் திருப்பூரில் இன்று புதிதாக 123 உட்பட 2850 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 161 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதோடு, இன்று மட்டும் 712 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.