திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 409 ஐ எட்டியுள்ளது. மேலும், 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 409 ஐ எட்டியுள்ளது. மேலும், 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களில், பல்லடம் முல்லை நகரில் 2 நபர், திருப்பூர் வேலம்பாளையத்தில் 2 நபர் மற்றும் திருப்பூர் டூம் லைட் காளியம்மன் கோவில்தெருவில் 2 நபர் உட்பட பல்வேறு பகுதிகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருப்பூரில் இன்று புதிதாக 235 உட்பட 2888 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 187 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதோடு, 1167 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பூரில் 115 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, முககவசம் அணியாமல் சென்றதாக 413 மக்களிடமிருந்து பறக்கும் படையினர் இன்று மட்டும் ரூ.47,800 அபராதத்தொகையாக வசூலித்துள்ளனர்.

இன்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களில், பல்லடம் முல்லை நகரில் 2 நபர், திருப்பூர் வேலம்பாளையத்தில் 2 நபர் மற்றும் திருப்பூர் டூம் லைட் காளியம்மன் கோவில்தெருவில் 2 நபர் உட்பட பல்வேறு பகுதிகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருப்பூரில் இன்று புதிதாக 235 உட்பட 2888 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 187 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதோடு, 1167 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பூரில் 115 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, முககவசம் அணியாமல் சென்றதாக 413 மக்களிடமிருந்து பறக்கும் படையினர் இன்று மட்டும் ரூ.47,800 அபராதத்தொகையாக வசூலித்துள்ளனர்.