பொள்ளாச்சி டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை - வனத்துறையினர் பாராட்டு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் ரம்யா, அர்ச்சனா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் ரம்யா, அர்ச்சனா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் காடர், முதுவர், மலசர் என மலைவாழ் மக்கள் ஆயிரத்து மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களின் பெண் குழந்தைகள் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டாப்சிலிப் காலணியைச் சேர்ந்த ரம்யா 311 மதிப்பெண், எருமை பாறை சேர்ந்த அர்ச்சனா 274 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வில் காடம்பாறை மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி கேரளாவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மலைவாழ் மக்களின் குழந்தைகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வனத்துறை சார்பில் ரம்யா, அர்ச்சனாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...