வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணை 100 அடியை எட்டியது!

கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.

கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 165 அடி உயரம் கொண்டது.

வால்பாறையிலுள்ள சின்னகல்லார் பகுதியில் உள்ள நீரார் அணைகளில் இருந்து பெறப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலமாக சோலையார் அணையில் சேகரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிப்புக்குப்பின் பரம்பிகுளம் வழியாக ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது. மேலும், ஒப்பந்தப்படி கேரள மாநிலத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சோலையார் அணை முன்கூட்டியே 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 30 அடி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.



இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 32 மி.மீட்டர், சின்னகல்லார் 48 மி.மீட்டர், நீரார் அணை 30 மி,மீட்டர், சோலையார் அணையில் 24 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...