கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.
கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 165 அடி உயரம் கொண்டது.
வால்பாறையிலுள்ள சின்னகல்லார் பகுதியில் உள்ள நீரார் அணைகளில் இருந்து பெறப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலமாக சோலையார் அணையில் சேகரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிப்புக்குப்பின் பரம்பிகுளம் வழியாக ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.
இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது. மேலும், ஒப்பந்தப்படி கேரள மாநிலத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சோலையார் அணை முன்கூட்டியே 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 30 அடி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 32 மி.மீட்டர், சின்னகல்லார் 48 மி.மீட்டர், நீரார் அணை 30 மி,மீட்டர், சோலையார் அணையில் 24 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 165 அடி உயரம் கொண்டது.
வால்பாறையிலுள்ள சின்னகல்லார் பகுதியில் உள்ள நீரார் அணைகளில் இருந்து பெறப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலமாக சோலையார் அணையில் சேகரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிப்புக்குப்பின் பரம்பிகுளம் வழியாக ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.
இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது. மேலும், ஒப்பந்தப்படி கேரள மாநிலத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சோலையார் அணை முன்கூட்டியே 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 30 அடி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 32 மி.மீட்டர், சின்னகல்லார் 48 மி.மீட்டர், நீரார் அணை 30 மி,மீட்டர், சோலையார் அணையில் 24 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.