கோவை சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கள ஆய்வு செய்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கள ஆய்வு செய்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.92 ஸ்ரீ ராம்‌ நகர்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத்‌ தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.98 போத்தனூர்‌ அம்மா உணவகத்தில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று உணவின்‌ தரத்தினை சோதனை செய்தார்கள்‌. 

மேலும்‌ அங்கு வரும்‌ பொதுமக்களிடம்‌ முகக்கவசம்‌ அணிவதையும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றுவதன்‌ அவசியம்‌ குறித்தும்‌ அறிவுறுத்தினார்‌.



பின்னர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 கஸ்தூரி கார்டன்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 கஸ்தூரி கார்டன்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில்‌ சேமித்து வைக்கப்படும்‌ குடிநீரில்‌ டெங்கு கொசுப்புழுக்கள்‌ உள்ளனவா என்பது குறித்து மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்.



நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சாரதா மில்‌ ரோடு பகுதியில்‌ இன்று நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு பயனாளிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும்‌ சத்து மாத்திரைகள்‌ வழங்கினார். 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...