கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்; போலீசாரின் நடவடிக்கைக்கு பின் உடல் அடக்கம்

கோவை: கோவையில் கடந்த 12ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இன்று போலீசாரின் நடவடிக்கைக்கு பின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

கோவை: கோவையில் கடந்த 12ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இன்று போலீசாரின் நடவடிக்கைக்கு பின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் பல்வேறு தளங்களில் தயக்கங்களும் எதிர்ப்புகளும் நிலவி வருகிறது.

இப்படி உயிர் பயத்தால் தங்களின் உறவுகளையே ஒதுக்கும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 70 வயது முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 12ம் தேதி அதிகாலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்றே பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். 

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் வரவில்லை. இப்படியிருக்க மருத்துவமனை நிர்வாகம் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் இன்று உறவினர்கள் அழைத்துவரப்பட்டு உடலை பெற்றுக் கொண்டு சுகாதார விதிகளின்படி அடக்கம் செய்தனர். 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...