கோவையில் இருந்து வாளையார் வழியாக கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக கடத்தி செல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக கடத்தி செல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது காய்கறி வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 1.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, இரு தினங்களுக்கு முன் ஆட்டோ மற்றும் சட்டை பையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 46 கோடி ரூபாயை போதை தடுப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து வாளையார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தமிழக எல்லையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து பனியன் கழிவுகளை ஏற்றி சென்ற பிக் அப் வாகனம் ஒன்றை கேரள போலீசார் வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, வாகனத்தில் இருந்த மூட்டைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தபோது, பனியன் கழிவுகளுக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பாக்கெட் பாக்கெட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான கோவையை சேர்ந்த ஜைன்னுலாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமர் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...