திருப்பூரில் கொரோனாவிற்கு இன்று 3 பேர் மட்டுமே பாதிப்பு; 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்
திருப்பூர்:திருப்பூரில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக கொரேனாவின் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று பாதிப்பின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், இன்று திற்றுது
தொற்றின் தாக்கம் பாதியாககுறைந்துள்ளது.
இன்று 3 பேருக்குமட்டுமே தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிப்பின்எண்ணிக்கை 294 லிருந்து 297 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், திருப்பூரில் புதிதாக 249 பேர் என மொத்தம் 2871 பேர்வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு, 284 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
"இன்று 302 பேருக்கு கொரோனாமாதிரி பரிமேற்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 118 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்",என ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.