கோவை: தனி மனித இடைவெளியை கடைபிடித்து இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று இறைச்சி கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு அளித்துள்ளார்.
கோவை: தனி மனித இடைவெளியை கடைபிடித்து இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று இறைச்சி கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு அளித்துள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி கடைகள் இயங்கியதால், கோவையில் இறைச்சி கடைகள் இயங்க இரண்டு வாரத்திற்கு முன்பு ஆட்சியர் தடை விதித்திருந்தார். கடைகள் இயங்காததால் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று இறைச்சி கடைகள், வியாபார சங்கத்தினர் ஆட்சியரைக் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், தனி மனித இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தால் அனுமதி கொடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வியாபாரிகள் உத்தரவாதம் அளித்ததன் பேரில் தற்போது கடைகள் இயங்க அனுமதி அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி, பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ 240க்கும், பண்ணை நாட்டுக்கோழி ஒரு கிலோ 350க்கும், நாட்டுக்கோழி 650, ஆட்டிறைச்சி கிலோ 900 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி கிலோ ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கறிக்கடை விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.