கோவை: கோவையில் வாகன சோதனையின் போது மருத்துவ ஊழியர்கள் என தெரிந்தும் பந்தயசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியாளர்களை மொபைல் போனில் படமெடுத்தும், நீண்ட நேரம் வாகனத்தை அனுமதிக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் வாகன சோதனையின் போது மருத்துவ ஊழியர்கள் என தெரிந்தும் பந்தயசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியாளர்களை மொபைல் போனில் படமெடுத்தும், நீண்ட நேரம் வாகனத்தை அனுமதிக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மிக அவசர தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் காவல்துறை சார்பாகவும் சுகாதாரத்துறை சார்பாகவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காவல் துறை, மருத்துவ துறை, சுகாதாரம் மற்றும் பத்திரிக்கை துறை என சேவை துறைகளை சார்ந்தவர்கள் தினந்தோறும் வெளியே வந்து செல்வது மிக அவசியமாக உள்ளது.
இந்த நிலையில், இன்று கோவை லட்சுமி மில் பகுதியில் வாகன சோதனையின் போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வாகனத்தை அனுமதிக்காமல் காவல் துறையினர் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மருத்துவ பணியாளர்கள் என அடையாள அட்டையை காண்பித்தபோதும் அவர்களை மொபைலில் படம் எடுத்துள்ளனர்.
மேலும், அவர்களின் மொபைலை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியுள்ளனர். பின்னர் பணியாளர்கள் அவர்களின் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அரைமணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றனர்.