கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த காந்தி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை நகரம் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காந்திநகர் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான காந்தி நகர் பகுதியை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜன், டிஎஸ்பி விவேகானந்தன், வால்பாறை வட்டார வள மைய மருத்துவர் பாபு கணேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன் வாசு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர், வால்பாறையில் கடைகள் திறக்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு காலை ஆறு மணியிலிருந்து மதியம் 12 மணி வரை என்று அறிவித்தார்.
மேலும், வால்பாறையில் நான்கு பகுதியிலும் தொடர்ந்து சோதனை சாவடிகள் செயல்படும் எனவும் பொள்ளாச்சியிலிருந்து சுகாதாரத்துறையினர் தனிமை படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த காந்தி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை நகரம் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காந்திநகர் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான காந்தி நகர் பகுதியை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ், வட்டாட்சியர் ராஜன், டிஎஸ்பி விவேகானந்தன், வால்பாறை வட்டார வள மைய மருத்துவர் பாபு கணேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன் வாசு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர், வால்பாறையில் கடைகள் திறக்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு காலை ஆறு மணியிலிருந்து மதியம் 12 மணி வரை என்று அறிவித்தார்.
மேலும், வால்பாறையில் நான்கு பகுதியிலும் தொடர்ந்து சோதனை சாவடிகள் செயல்படும் எனவும் பொள்ளாச்சியிலிருந்து சுகாதாரத்துறையினர் தனிமை படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.