கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 9ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதி புங்கன் ஒடை, போத்தமடையில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றனர்.
இதையடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்ததில் ராசு, கருப்புசாமி இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணியில் அலட்சியப் போக்கில் இருந்ததாக வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன் மற்றும் வனக்காவலர் அஜித் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். புலிகள் இறந்த இடங்களை தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை செய்கின்றனர்.
கடந்த 9ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதி புங்கன் ஒடை, போத்தமடையில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொன்றனர்.
இதையடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்ததில் ராசு, கருப்புசாமி இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணியில் அலட்சியப் போக்கில் இருந்ததாக வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன் மற்றும் வனக்காவலர் அஜித் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். புலிகள் இறந்த இடங்களை தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை செய்கின்றனர்.