பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.



கோவை சிவானந்தா காலணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி 600 வட மாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை குழந்தைகள் நல அறக்கட்டளை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரோடு இணைந்து வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராசாமணி, கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், 36 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறினார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் 3 பேர், சிறுமுகை பகுதியில் 2 பேர் என 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றுக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், இரண்டாம் கட்ட ஊரடங்கு கோவைக்கு மிக அவசியமானது என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஒரு இலட்சம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது எனவும், ஊரடங்கு முடியும் வரை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...