வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை புலி தாக்கி மாடு பலி..! கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!

கோவை: வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை புலி தாக்கி மாடு பலியானதால் அச்சமடைந்துள்ள மக்கள் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை புலி தாக்கி மாடு பலியானதால் அச்சமடைந்துள்ள மக்கள் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட். இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வாசுகி. இவர் கணவர் சுடலைமுத்து இறந்து விட்டார். வாசுகி தோட்டத்தில் பணியாற்றுவதோடு மாடு வளர்த்து பால் விநியோகித்து ஜீவனம் செய்து வருகிறார். 

இந்நிலையில், வழக்கம் போல் காலையில் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். மாலையில் மாடு வீடு திரும்பாத நிலையில் மாட்டை தேடிய போது அவருடைய வீட்டிற்கு கீழ் உள்ள சாலையின் ஓரத்தில் மாடு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். 



விசாரணையில் மாட்டை சிறுத்தைப் புலிகள் கொன்று தின்றது தெரியவந்தது. தொடர்ந்து, வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் மாட்டை உடல்கூறாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாடு அங்கேயே புதைக்கப்பட்டது. 



தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...