கோவை: கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தாண்டி பொதுமக்கள் வெளியே செல்ல கூடாது அதையும் மீறுபவர்கள் மீது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கறிக்கோழி வியாபாரிகள் சங்கத்தினர் அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நாள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் உதகையில் இறைச்சி விற்பனை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை விற்பனை செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அனுமதி அளித்து இருந்தார். சமூக விலகலை எவ்வாறு மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை பார்த்து 7 நாட்களும் கடைகள் திறக்க அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது.
கோவையில் நெருக்கமான வீடுகள் உள்ள நிலையிலும் அதிக மக்கள் தொகை இருப்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் அடுத்த உத்தரவு வரும் இயங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கோவை அன்னூர் வட்டம் குமாரபாளையம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான இறைச்சி கடையில் தடையை மீறி விற்பனை செய்வதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற வருவாய் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு சீல் வைத்தனர்.
இதனிடையே, கோவையில் ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுக்கரையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வந்த இரண்டு இறைச்சி கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோல, கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள சிக்கன் கடையில் அரசின் உத்தரவை மீறி ஆன்லைனில் விற்பனை நடைபெற்று வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.