வால்பாறையில் கேரளா சாலக்குடி சாலையின் நடுவே சென்ற முதலையால் பரபரப்பு; பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தல்!

கோவை: வால்பாறை கேரளா சாலக்குடி சாலையில் வாழைச்சால் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பிரதான சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: வால்பாறை கேரளா சாலக்குடி சாலையில் வாழைச்சால் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பிரதான சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து மழுக்குப்பாறை வழியாக கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. கொரானா தொற்று நடவடிக்கை காரணமாக தமிழக கேரள எல்லை சாலை மூடப்பட்டுள்ளது. உள்ளூர் வாசிகள் மட்டும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 



இந்நிலையில், வாழைச்சால் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பிரதான சாலையில் முதலை ஒன்று சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அவ்வழியாக வந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த கேரளா வனத்துறையினர், சாலையில் சுற்றித்திரிந்த முதலையை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆற்று கொண்டுபோய் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆட்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் சாலைகளில் வரும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொதுமக்கள் மிக கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...