நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்தி பாலடா பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் தலை இயந்திரத்தில் மாற்றியதால் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கேத்தி பாலடா பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் தலை இயந்திரத்தில் மாற்றியதால் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கேத்தி எதுமை கண்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்ரமணி, சுமித்ரா. இவர்களது மகளான நந்தினி அருகிலுள்ள பாலடா பகுதியில் மதுரைக்கு செல்லும் கேரட்களை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, நந்தினியின் தலை முடியானது இயந்திரத்திற்குள் சிக்கியது. இதில் நந்தினியின் தலை துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர் இது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டு அரசு உதகை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
உரிய பாதுகாப்பு இல்லாமல் கேரட் சுத்தம் செய்யும் பணியை எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.