கோவையில் காவல்துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள்!

கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினருடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினருடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல் படையினர் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.



இதனிடையே, தமிழக காவல்துறை சார்பில் விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முன்னாள் ராணுவ வீரர்கள் 5 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதைத்தொடர்ந்து இன்று கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 முன்னாள் ராணுவ வீரர்களும், மாவட்ட காவல் எல்லையான புறநகர் பகுதிகளில் 42 முன்னாள் ராணுவ வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...