கோவை: கோவையில் கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஊதிய பணத்தை வாங்கி கொடுத்த வருவாய் வட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் கேரளாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஊதிய பணத்தை வாங்கி கொடுத்த வருவாய் வட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ஜெயலட்சுமி தம்பதியினர் கவுண்டர் மில் அருகே தங்கி வேலை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இத்தம்பதியினருக்கு 5 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையும் பறிபோனது.
தனியார் நிறுவனம் கொடுத்திருந்த அறையில் தங்கியிருந்து மில்லில் வேலை பார்த்து வந்தனர். தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இல்லாத காரணத்தினாலும் வருமானம் இன்றி அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கேரளாவிற்கு செல்வதற்கு தமிழக எல்லையான வாளையாறுக்கு சென்ற போது கேரள போலீசார் அவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கு தான் தங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உங்களை அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உடனடியாக தங்களுடைய சொந்த ஊரான ஆலப்புழாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த தகவலை சமூக வலைதளம் மூலம் அறிந்த வடக்கு வருவாய் வட்டாட்சியர் மகேஷ்குமார் சரவணம்பட்டி காவல் துறையினருடன் பேசி பிரகாஷிற்கு சேர வேண்டிய சம்பளத்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து, சரவணம்பட்டி போலீசார் தனியார் நிறுவனத்தில் கொடுக்கப்பட வேண்டிய 13,000 ரூபாயை தனியார் முதலாளியிடமிருந்து பெற்றுக்கொடுத்தனர். அவரது குடும்பம் அங்கேயே தங்குவதற்கும் உணவளிக்கவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. வடக்கு வட்டாட்சியர் மற்றும் சரவணம்பட்டி காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ஜெயலட்சுமி தம்பதியினர் கவுண்டர் மில் அருகே தங்கி வேலை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இத்தம்பதியினருக்கு 5 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையும் பறிபோனது.
தனியார் நிறுவனம் கொடுத்திருந்த அறையில் தங்கியிருந்து மில்லில் வேலை பார்த்து வந்தனர். தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இல்லாத காரணத்தினாலும் வருமானம் இன்றி அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கேரளாவிற்கு செல்வதற்கு தமிழக எல்லையான வாளையாறுக்கு சென்ற போது கேரள போலீசார் அவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கு தான் தங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உங்களை அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உடனடியாக தங்களுடைய சொந்த ஊரான ஆலப்புழாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த தகவலை சமூக வலைதளம் மூலம் அறிந்த வடக்கு வருவாய் வட்டாட்சியர் மகேஷ்குமார் சரவணம்பட்டி காவல் துறையினருடன் பேசி பிரகாஷிற்கு சேர வேண்டிய சம்பளத்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து, சரவணம்பட்டி போலீசார் தனியார் நிறுவனத்தில் கொடுக்கப்பட வேண்டிய 13,000 ரூபாயை தனியார் முதலாளியிடமிருந்து பெற்றுக்கொடுத்தனர். அவரது குடும்பம் அங்கேயே தங்குவதற்கும் உணவளிக்கவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. வடக்கு வட்டாட்சியர் மற்றும் சரவணம்பட்டி காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.