திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



திருப்பூரில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிக்கும் கனரக வாகனங்களை பார்வையிட்ட கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்று மட்டும் 14 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றார். 

அதேபோல, மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம் சென்றடையும் வகையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பல்வேறு அமைப்பினர் அளித்த முதல்வர் நிதிக்கான காசோலையினையும் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...