நீலகிரி: உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது.
நீலகிரி: உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுள்ள, 9 பேர் இ.எஸ்.ஐ., சிகிச்சை பெற்று வருகின்றனர். 232 பேர் வீட்டு கண்காணிப்பிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த, 800 பேர், 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 'சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், வெளியிடங்களுக்கு வருபவர்கள் 'மாஸ்க்' கட்டாயம் அணிய வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்வது, மூலம் நோய் தொற்று அபாயத்தை கண்டறிந்து தடுக்க முடியும் என்றார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுள்ள, 9 பேர் இ.எஸ்.ஐ., சிகிச்சை பெற்று வருகின்றனர். 232 பேர் வீட்டு கண்காணிப்பிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த, 800 பேர், 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 'சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், வெளியிடங்களுக்கு வருபவர்கள் 'மாஸ்க்' கட்டாயம் அணிய வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளும் நடமாடும் வாகன இயக்கம் துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்வது, மூலம் நோய் தொற்று அபாயத்தை கண்டறிந்து தடுக்க முடியும் என்றார்.