கோவையில் கொரோனா தொற்றுள்ள சமூக ஆர்வலருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் உட்பட 32 பேருக்கு தொற்று இல்லை

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளான சமூக ஆர்வலருடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் என 72 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளான சமூக ஆர்வலருடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் என 72 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனோ அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வெளியாகியது.

இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் அவரை 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பினர்.

ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்கள் முடிவதற்கு முன்பே காவல்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கும் தன்னார்வலர் பணிக்கு சென்றார். இந்த நிலையில் முதியவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இவருடன் தொடர்பு இருந்ததாக 32 போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 40 பேரின் முடிவுகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...