கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.
கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.
சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ஹை டெக் என்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் சி.என்.சி ஹைட்ராலிக் இயந்திரம் என பல்வேறு என்ஜினியரிங் பொருட்கள் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் குறைந்த விலையிலான வெண்டிலேட்டரை உருவாக்கி உள்ளது. தற்போது வெண்டிலேட்டர்கள் சந்தையில் ரூ.8300ல் இருந்து 12000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் இது கிடைக்கப் பெற உருவாக்கி உள்ளதாகவும் 5900 ரூபாயில் இந்த வெண்டிலேட்டரை வழங்க தங்களால் முடியும் என அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
அதேபோல, நாள் ஒன்றுக்கு 100 வெண்டிலேட்டரை தயாரித்து தங்களால் வழங்க முடியும் எனவும் மெக்கானிக்கல் மற்றும் எலக்டிரிக்கல் முறையில் இவை இயங்கும் என தெரிவித்தார். அடக்க விலையில் இதனை தயாரித்து உள்ளதாகவும் எளிதில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இது தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு அனுமதி அளித்து இதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதனை செய்து வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.