கோவையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்ல முயன்று பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசியவர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்று பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளளால் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்று பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளளால் பேசியவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை குனியமுத்தூர் அம்மன் கோவில் சந்திப்பு அருகே கொரோனா தொற்று இருப்பதால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், குனியமுத்தூர் எஸ்.என்.ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது சபிக்(34) என்ற இளைஞர் தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் உதவி ஆய்வாளர் சௌபர்ணிகா இங்கு யாரும் செல்லக்கூடாது என தடுத்துள்ளார்.

அப்போது, பெண் ஆய்வாளரை தகாத வார்த்தைகளளால் பேசி முகமது சபீக் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சௌபர்ணிகா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து, தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்ற முகமது சபிக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...