கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் ஊர்காவல் படையினருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்களை ஊர்காவல் படைத் தலைவர் தனசேகர் வழங்கினார்.
கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் ஊர்காவல் படையினருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்களை ஊர்காவல் படைத் தலைவர் தனசேகர் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் 350 ஊர்காவல் படையினர் போலீசாருடன் இணைந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 30 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
சக்தி சுகர்ஸ், சாமுண்டீஸ்வரி சுகர்ஸ், பன்னாரி அம்மன் பிளோர் மில்ஸ் மற்றும் கிரினார் டீ ஆகியோர் பங்களிப்புடனும் ரோட்டரி கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் அளித்த இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவியுடன் இந்த பொருட்கள் விநியோகம் செய்ய்பட்டதாக ஊர்காவல் படை தலைவர் தனசேகரன் தெரிவித்தார்.
மாநகர காவல்துறை ஆணையர் மூலம் இது வழங்கப்பட இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத அவர் கலந்து கொள்ளாததால் இந்த பொருட்களை ஊர்காவல் படை தலைவர் தனசேகரன், ஸ்பெக்ட்ரம் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் பாலமுரளி, சி.ஜி.குமார் ஆகியோர் வழங்கினர்.