கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை உட்பட நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கொரோனோ தொற்றுடைய நபர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்படி இன்றுடன் கோவையில் இந்த வைரஸ் தொற்றால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இப்படி சிகிச்சை பெற்றவர்களில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் 40 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைரஸ் தொற்று முற்றிலும் குணமடைந்து இருப்பதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் இவர்களுக்கு ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை உட்பட நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கொரோனோ தொற்றுடைய நபர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்படி இன்றுடன் கோவையில் இந்த வைரஸ் தொற்றால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இப்படி சிகிச்சை பெற்றவர்களில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் 40 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைரஸ் தொற்று முற்றிலும் குணமடைந்து இருப்பதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் இவர்களுக்கு ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.