குன்னூர் குரும்பாடி பழங்குடியினர் கிராமங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு முக கவசம் அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதன் மாவட்ட செயலாளர் பா.மு முபாரக் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு முக கவசம் அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதன் மாவட்ட செயலாளர் பா.மு முபாரக் தலைமையில் நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் நகர் பகுதிகளில் ஓரளவு நிவாரணப் பாெருட்கள் கிடைத்து வந்தாலும் நகரினை விட்டு வெகு தொலைவில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்ட திமுக சார்பில் குன்னூர் அருகில் உள்ள சின்ன குரும்பாடி, பெரிய குரும்பாடி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் பொருட்கள் வழங்கப்பட்டன.



மேலும் சாலைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் மாநில துணை செயலாளர் அன்வர்கான், நகர செயலாளர் எம். ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 600க்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தெரிவித்துள்ளார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...