கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பூமார்கெட்டில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பூமார்கெட்டில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.
கோவை பூ மார்கெட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் கிலோ வரை பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் விஷேச நாட்களில் இந்த விற்பனை 10 டன் வரை விற்பனை செய்யப்படும்.
பூக்களின் வரத்து தொண்டாமுத்தூர், காரமடை, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, நிலக்கோட்டை, மதுரை, சேலம், தருமபுரி, ராயக்கெட்டை, ஹொசூர், பெங்களூரு, தாளவாடி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரளி, மருகு, துளசி, மரிக்கொழுந்து, மல்லி, முல்லை, ஜாதி, கனகாம்பரம் என ஏழு வகையான ரோஜா மலர்கள், செண்டு மல்லி, செவ்வந்தி என பலவகை பூக்கள் இங்கு விற்பனை செய்யப்படும். இப்பூக்களை கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தினர் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு 144 மேடை கடைகள், 20 கூரை கடைகள், ஸ்டால் கடைகள் 28 என தினந்தோறும் விற்பனையில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி கடையை திறந்து பூக்கள் வியாபாரம் செய்த 3 கடைகளை மூட உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த பூக்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பனை தொடர்பு கொண்ட கேட்டது, வழக்கமாக தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளன்று பூஜை வழிபாடுகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள் வாங்கி செல்வது வழக்கம். பூ விற்பனை மூலம் இரண்டாயிரத்தில் இருந்து 3000 குடும்பங்கள் பயன் பெறுவதாகவும் தற்போது 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதனையும் மீறி வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசின் உத்தரவை அனைவரும் மதித்து நடப்பதே நல்லது. இந்த வருடம் இல்லாவிடில் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம் பாதுகாப்பு தான் முக்கியம், இதனை அனைவரும் கடைபிடித்தல் நல்லது என தெரிவித்தார்.