கூடலூர் அருகே வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்..! தேயிலை தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

நீலகிரி: கூடலூர் அருகே வீட்டின் ஜன்னலை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தில் தேயிலை தொழிலாளி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். யானைகள் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் அருகே வீட்டின் ஜன்னலை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தில் தேயிலை தொழிலாளி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். யானைகள் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் பாண்டியார் டான்டீ பகுதியை (அரசு தேயிலைத் தோட்ட கழகம்) ஒட்டிய குண்டம்புழா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. 

இந்த யானைகள், கடந்த வாரம் பாலமேட்டில் சிவராமன் என்பவர் வீட்டின் சமையலறையை சேதப்படுத்தியது. மேலும், நேற்று முன்தினம் இரவு பாண்டியார் டான்டீ சரகம் எண்-2 தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட யானைகளை, வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் அப்பகுதியில் நுழைந்த அந்த யானைகள், பாலா என்பவர் வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி, அவர் படுத்திருந்த கட்டிலின் மீது தள்ளியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சத்தமிட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். இச்சம்பவத்தால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்திவரும் யானைகளிடமிருந்து நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்க, வனத்துறையும், டான்டீ நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...