கோவை: ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.
கோவை: ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வெளியில் நடமாடக் கூடாது எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவை என கேட்டு கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டரை தாண்டி வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையும் மீறி மக்கள் தேவைகளை தவிர்த்து வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை அபராதம், வாகன பறிமுதல் என கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை மீறி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்து காவல்துறை எச்சரித்து அனுப்பியது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர அடிக்கடி வெளியே வருவதால், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மருந்து விற்பனை செய்பவர்கள், மருத்துவ உபகரணங்கள் செய்பவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஆகியவர்கள் பொதுமக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை தவிர்த்த பின்னரும் மக்களின் கூட்டம் அதிகரித்திருப்பதால் என்ன செய்வது எனத்தெரியாமல் சில மணி நேரம் பொதுமக்களை காவல் துறையினர் காக்க வைக்கின்றனர்.

இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் மக்கள் கலைந்து செல்லாமல் அங்கே நின்றனர். ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வெளியில் நடமாடக் கூடாது எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவை என கேட்டு கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டரை தாண்டி வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையும் மீறி மக்கள் தேவைகளை தவிர்த்து வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை அபராதம், வாகன பறிமுதல் என கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை மீறி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்து காவல்துறை எச்சரித்து அனுப்பியது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர அடிக்கடி வெளியே வருவதால், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மருந்து விற்பனை செய்பவர்கள், மருத்துவ உபகரணங்கள் செய்பவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஆகியவர்கள் பொதுமக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை தவிர்த்த பின்னரும் மக்களின் கூட்டம் அதிகரித்திருப்பதால் என்ன செய்வது எனத்தெரியாமல் சில மணி நேரம் பொதுமக்களை காவல் துறையினர் காக்க வைக்கின்றனர்.

இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தி காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் மக்கள் கலைந்து செல்லாமல் அங்கே நின்றனர். ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.