கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு போராடிப் பிடித்த வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு போராடிப் பிடித்த வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் மணி என்பவர் வீட்டில் புகுந்த நல்லபாம்பு ஒன்று சர்வ சாதாரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை கடந்து சென்றது.
அப்போது, சாலையில் சென்றவர்கள் நல்ல பாம்பு சாலையில் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனை பார்த்த பாம்பு அருகில் இருந்த கோர்ட் சாலையில் உள்ள தண்ணீர் குழாயில் புகுந்து கொண்டது. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை பையிலிட்டு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இது அதிக விஷமுள்ள கோதுமை நாகம் என்று தெரிவித்தனர். பாம்பு பிடிபட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் மணி என்பவர் வீட்டில் புகுந்த நல்லபாம்பு ஒன்று சர்வ சாதாரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை கடந்து சென்றது.
அப்போது, சாலையில் சென்றவர்கள் நல்ல பாம்பு சாலையில் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனை பார்த்த பாம்பு அருகில் இருந்த கோர்ட் சாலையில் உள்ள தண்ணீர் குழாயில் புகுந்து கொண்டது. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை பையிலிட்டு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இது அதிக விஷமுள்ள கோதுமை நாகம் என்று தெரிவித்தனர். பாம்பு பிடிபட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பை ஏற்பட்டது.