கோவை கோட்டைமேடு பகுதியில்‌ மோட்டார்‌ பொருத்திய டிராக்டர்‌ மூலம்‌ கிருமிநாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை கோட்டைமேடு பகுதியில்‌ மோட்டார்‌ பொருத்திய டிராக்டர்‌ மூலம்‌ கிருமிநாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ கோட்டைமேடு பகுதியில்‌ கொரோனா தடுப்புப்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, மோட்டார்‌ பொருத்திய டிராக்டர்‌ மூலம்‌ கிருமிநாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

கிருமிநாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ தெரிவித்ததாவது:

பொதுமக்கள்‌ ஊரடங்கு அமலில்‌ இருப்பதால்‌ வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்‌. தனிமனித இடைவெளியை தவறாமல்‌ கடைபிடிக்க வேண்டும்‌ என்றார்.



மாநகராட்சியில்‌ டிராக்டரில் பொருத்தப்பட்ட ஸ்பேரேயர்‌ மூலம்‌ கிருமி நாசினி தெளிக்கும்‌ பணிகள்‌ மண்டலத்திற்கு 2 வாகனங்கள்‌ வீதம்‌ 10 வாகனங்களிலும்‌, டாடா ஏசி வாகனத்தில்‌ 5000 லிட்டர்‌ நாசினி மருந்து கொண்டதாக 5 வாகனங்களிலும், ஸ்பேரேயர்‌ கருவிகள்‌ மண்டலத்திற்கு 70 வீதம்‌ 350 கருவிகள்‌ மூலம்‌ கிருமி நாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுகிறது. கொரோனா நோய்த்‌ தடுப்புப்‌ பணிகள்‌ மாநகராட்சியில்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, வருவாய்‌ கோட்டாட்சியா தனலிங்கம்‌ அவர்கள்‌, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌ அவர்கள்‌, நிர்வாக பொறியாளர்‌ கருப்பசாமி அவர்கள்‌, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...