கோவையில் காய்கறி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது - 60 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை: கோவையில் காய்கறி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை மறைத்து எடுத்து சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் காய்கறி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை மறைத்து எடுத்து சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

கோவில்பாளையம் அருகே கோட்டையபாளையம்-கொண்டயபாளையம் பகுதி சாலையில் சரக்கு வாகனத்தில் மதுபானங்களை எடுத்து செல்லப்படுவதாகக் கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த TN 66 E 5677 என்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த வாகனம் காய்கறி விற்பனைக்கு உபயோகிக்கும் வகையில் தார்பாய்கள் மூடி இருந்தது. போலீசாரின் சோதனையில் வாகனத்தில் 60 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வாகனத்தில் இருந்த கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அருண்குமார் மற்றும் குரும்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை 437/20 4(1) (a) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...