கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் தாயையும் சேயையும் தரையில் படுக்க வைத்த அவலம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாயையும் சேயையும் தரையில் படுக்கவைத்த அவலம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாயையும் சேயையும் தரையில் படுக்கவைத்த அவலம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அளவில் சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அரசு பல்வேறு நிதிகளை வழங்கி நலத்திட்ட பணிகளை மேற்கொண்டாலும் இங்கு நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பல நேரங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதேபோல, அடிக்கடி நோயாளிகள் படுக்கை வசதிகள் இன்றி தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த சில மணிநேரங்களில் தாயையும் சேயையும் தரையில் படுக்க வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் கூறும் போது;-

குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் வார்டுக்கு மாற்றப்பட்டு தாயையும் சேயையும் தரையில் படுக்க வைத்தனர். அவர்களுக்கு உரிய மெத்தை வசதிகளைக் கூட மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை.

பின்னர் இதனை கண்ட அவரின் கணவர் வாக்குவாதம் செய்த பின்புதான் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும், குழந்தையை பெற்றெடுத்த தாய் சேய் மற்றும் பல நோயாளிகள் இப்படி தரையில் படுக்கும் அவலம் இங்கு உள்ளது. இதை அரசு தலையிட்டுச் சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...